தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ள திரைப்படம் தான் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். உண்மை கதையை மையமாக எடுத்துக் கொண்ட இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ மேஜரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை மையமாகக் கொண்டுதான் அமரன் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில், அமரன் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி வாங்கிய சம்பள விபரம் வெளியாகி உள்ளது. அவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாரி வழங்கி உள்ளார் கமலஹாசன்.
அதன்படி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சுமார் 30 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அவரது கேரியரிலேயே எஸ்கே வாங்கிய அதிக சம்பளம் என்றால் அமரன் படத்திற்காக வாங்கியது தான் என கூறப்படுகிறது.
மேலும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பல்லவிக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த சாய்பல்லவி, அமரன் படத்தில் நடிப்பதற்காக முதன்முறையாக மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.
Listen News!