• Apr 07 2025

'குட் பேட் அக்லி' படத்தில் ரசிகர்களுக்கு இயக்குநர் வைத்த சஸ்பென்ஸ்..!VK சுந்தர் ஓபன் டாக்!

subiththira / 23 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான அஜித் குமார் தற்பொழுது நடித்து வரும் படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படம் அஜித் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வெளியாகியிருக்கும் போஸ்டர்கள், பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் என்பன சிறப்பாகக் காணப்பட்டது.

இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில் பிரபல நடிகரும் இயக்குநருமான VK சுந்தர், 'குட் பேட் அக்லி' பற்றிக் கதைத்துள்ள வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது. VK சுந்தர் அதில் கூறியதாவது,"அஜித் இந்த 'குட் பேட் அக்லி' படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்தார் என்றதுடன் மிகவும் கஷ்டப்பட்டு, பலத்த முயற்சியுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இது எல்லாமே அவரது ரசிகர்களுக்காகத் தான் எனவும் அவர் செலவழித்த உழைப்பு திரையில் உற்சாகமாக வெளிப்படும்." எனவும் கூறியுள்ளார்.


VK சுந்தரின் இந்தக் கருத்துக்கள் அஜித் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் VK சுந்தர், "இப்படத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ரசிகர்களுக்காக பெரிய சஸ்பென்ஸ் வைத்திருக்கின்றார். படம் முழுவதும் ரசிகர்களை அசத்தும் விதமாக அமைந்துள்ளது." என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், 'குட் பேட் அக்லி' படம் ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான அனுபவமாக இருக்கப் போகின்றது என்பது தெரியவந்துள்ளது. மேலும் 'குட் பேட் அக்லி' படம் ஏப்ரல் 10ம் திகதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இப்படம் உலகமெங்கும் பெரும் அளவில் வசூல் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


VK சுந்தர் மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "ஒரு பிரபல நடிகர் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கின்றார். அவர் யார் என்பதைக் கண்டு பிடிக்க ரசிகர்களுக்கு மிகுந்த ஆவல் இருக்கும்!" எனவும் தெரிவித்துள்ளார்.

'குட் பேட் அக்லி' படம் தற்போது அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. VK சுந்தரின் நேர்காணல் மூலம், இந்த எதிர்பார்ப்பு இன்னும் பலமடைந்துள்ளது. இதனால் ஏப்ரல் 10ம் திகதி படத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Advertisement

Advertisement