• Jun 07 2025

மனோஜை வெளுத்து வாங்கிய பாட்டி..! ரோகிணியின் ஆட்டத்திற்கு முடிவு கட்டிய அண்ணாமலை!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ஸ்ருதி ரோகிணிக்கு போன் எடுத்து நானும் அடுத்து என்ன நடக்கப்போகுது என்று தான் யோசிச்சுக் கொண்டிருகேன் என்று கூறுகின்றார். மேலும் நேருல கதைப்போம் என்று சொல்லிட்டு போனை நிப்பாட்டுறார். இதனை அடுத்து ஸ்ருதி ரவியைப் பாத்து ரோகிணி இப்ப எதுக்குத் தெரியுமா போன் எடுத்தாங்க தங்களுக்கு சப்போர்டா கதைக்கிறதுக்கு ஆட்களை சேர்க்கத் தான் என்றார்.

இதைக் கேட்ட ரவி இந்த விஷயத்தில நாம தலையிட வேண்டாம் என்று கூறினார். இதனை அடுத்து ரோகிணி இந்த விஷயத்தில எனக்கு சப்போர்ட் பண்ண ஸ்ருதிய இழுப்போம் என்று பாத்தா அவள் ரொம்ப உசாரா இருக்காள் என்று சொல்லுறார். மேலும் மீனாவுக்கு மட்டும் அவள் உடனே சப்போர்ட் பண்ணுவாள் என்று சொல்லுறார். இதனை அடுத்து அண்ணாமலை பாட்டியை கூட்டிக் கொண்டு வீட்ட வாறார்.


பாட்டியைப் பாத்த முத்து ரொம்பவே சந்தோசப்படுறார். மேலும் பாட்டி ரோகிணிக்கு ரொம்பத்தான் குளிர் விட்டுப் போச்சு என்று சொல்லுறார். இதனை அடுத்து பாட்டி மனோஜைப் பாத்து அண்ணாமலைக்கு இப்ப எவளா வயசாச்சு அவன நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா என்று கேக்கிறார். அதைக் கேட்ட முத்து அப்புடிக் கேளுங்க பாட்டி என்று சொல்லுறார்.

இதனை அடுத்து ஸ்ருதியும் ரவியும் வீட்ட வந்து பாட்டியோட கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ரோகிணி மனோஜ் போனுக்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பாத்து மனோஜ் போன் எடுக்கிறார். இதனை அடுத்து மனோஜ் ரோகிணிய வீட்ட வரச்சொல்லிச் சொல்லுறார். அதுக்கு ரோகிணி என்ன அடிக்கிறதுக்கு உனக்கு மட்டும் தான் உரிமை வேற யாரும் என்ன அடிக்கக் கூடாது என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement