• Oct 26 2024

பணத்தை அப்பாவிடம் கொடுக்க சொன்ன முத்து..? மனோஜ் எடுத்த முடிவு! சிக்கிய ரோகிணி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ஜீவா கொடுத்த பணத்தில் ஷாப்பிங் செய்து விட்டு வீட்டுக்கு வந்த மனோஜ், ரோகிணி அப்பா தனக்காக 15 லட்சம் அனுப்பியதாக பொய் சொல்லுகிறார். மேலும் இன்னும் 15 லட்சம் வர இருப்பதாகவும் சொல்லுகிறார். இதை நம்பிய விஜயா சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்.

ஆனாலும் உங்க அப்பா ஜெயில்ல இருக்காரு எப்படி பணம் அனுப்புவார் என முத்து கேட்க, ஸ்ருதியும் தானே என கேட்கிறார். அதற்கு ரோகிணி அப்பா போக முதல் மாமா கிட்ட கொடுத்துட்டு போய் இருக்கார் என சொல்ல, அப்போ அவர் ஜெயிலுக்கு போறது முன்னாடியே தெரியுமா என கேட்க, சமாளிக்கிறார் ரோகிணி. காசு வந்த சந்தோஷத்தில் விஜயாவும் சேர்ந்து முத்துவின் வாயை அடைகிறார்கள்.


ஆனாலும் இது அப்பாவுக்கு சேர வேண்டிய பணம் கொடு, அம்மா மேலயும் சத்தியம் பண்ணி இருக்க என்று சொல்ல, அண்ணாமலை இல்லை இது ரோகிணிக்கு வந்த பணம். அவங்க அப்பா அனுப்பினது அவங்களுக்கு தான் என சொல்ல, மனோஜ் நான் பிசினஸ் பண்ண போறன். பண்ணி அந்த காச தருவேன் என சொல்லுகிறார்.

மறுநாள் முத்து, மீனாவிடம் இந்த பணம் வந்ததுல ஏதோ சந்தேகமா இருக்கு என சந்தேகப்பட்டு சொல்ல, இனி அவங்க விசயத்துல தலையிடத்தைங்க. அவங்க பணம் அவங்க என்னமோ பண்ணட்டும் என சொல்லுகிறார்.

அதன்பின் எல்லாரும் சாப்பிட இருக்க, மீனா சாப்பாடு எடுத்து வைக்கிறார். விஜயா ரோகிணியை கூட்டிட்டு வந்து தனது கையாலையே பரிமாறுகிறார். ஆனால் அவருக்கு முட்டை எல்லாம் வைப்பதை பார்த்த முத்து, இன்னும் விரதம் முடியலையே, பிறகு மிச்ச 15 லட்சம் வராது என சொல்ல, ஆமால என அவருக்கு வெறும் சட்னி, தோசை கொடுக்கிறார். இதன் போது ரோகிணியின் அப்பா பணம் அனுப்பியதை பற்றி பேசி மீனாவை குத்தி காட்டுகிறார் விஜயா. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement