இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த 2017ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். நான்கு ஆண்டுகள் தம்பதியாக வாழ்ந்த இருவரும் 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன் பின் சமந்தா தனது வாழ்க்கையை முழுமையாக மாற்றிக் கொள்ளத் தொடங்கினார்.
சமீபத்தில் சமந்தா தனது முன்னாள் கணவரை நினைவுபடுத்தும் சில முக்கிய விஷயங்களை மாற்றியமைத்திருக்கிறார். அவருடைய நிச்சயதார்த்த மோதிரம் மற்றும் திருமண ஆடையை மாற்றியமைத்ததோடு தற்போது முதுகில் குத்தியிருந்த “YMC” எனும் டாட்டூவையும் முழுமையாக நீக்கியுள்ளார்.
"YMC" என்பது சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் இணைந்து நடித்த 'யே மாய சேசாவே' படத்தின் குறும்பெயர். அதனை காதலின் நினைவாக அவர் டாட்டூவாக முதுகில் குத்தியிருந்தார். ஆனால் தற்போது அந்தப் பழைய நினைவுகளிலிருந்து முழுமையாக வெளிவந்து தனக்கான புதிய பாதையை சமந்தா தேர்ந்தெடுத்துள்ளாரெனும் கருத்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Listen News!