• Oct 26 2024

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் ’தங்கலான்’ - ’அந்தகன்’..! விக்ரம் - பிரசாந்த் இடையே என்ன தான் பிரச்சனை?

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரம் மற்றும் நடிகர் பிரசாந்த் ஆகிய இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்ற நிலையில் பல ஆண்டுகளாக இரு குடும்பத்துக்கும் இடையே பகைமை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்ரம் நடித்துள்ள ’தங்கலான்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் அதே ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரசாந்த் நடித்த ’அந்தகன்’ திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல ஆண்டுகளாக இருந்து வரும் பகைமை மீண்டும் தொடர்ந்து வருவதாக திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விக்ரம் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சினிமாவில் அறிமுகமான நிலையில் இரு குடும்பத்திற்கும் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை என்று கூறப்படுகிறது.

இருவரும் நெருங்கிய உறவினர்களாக இருந்த போதிலும் விக்ரமுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்று தியாகராஜன் சில தயாரிப்பாளர்களிடம் கூறியதாகவும் அப்போதே கிசுகிசுக்கள் வெளியாகின. இதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் இரு குடும்பத்தில் உள்ள பகைமை மட்டும் அவ்வப்போது செய்தியாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தன.



இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் உருவான ’கோப்ரா’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இரண்டு வருடம் கழித்து அவர் ஹீரோவாக நடிக்கும் ’தங்கலான்’ திரைப்படம் வெளியாகிறது. இடையில் ’பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்கள் வெளிவந்தாலும், அவர் இரண்டு படங்களிலும் சிறிது நேரம் வரும் கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் ’தங்கலான்’ படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அந்த படம் ரிலீஸ் ஆகும் அதே ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரசாந்த் நடித்த 'அந்தகன்’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ’தங்கலான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரங்களில் ’அந்தகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விக்ரம் மற்றும் பிரசாந்த் குடும்ப பகை தொடர்ந்து கொண்டிருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement