• Apr 29 2026

'நல்லா இரு கண்ணா...' என மட்பாண்டக் கலைஞரை பாராட்டிய ரஜினி..! வெளியான தகவல் இதோ..!

shali / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்த் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் கலைஞரின் வீடியோவை பார்த்து,  அவருக்கு உற்சாகமான செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார். ரஜினி அந்த கலைஞரின் திறமையை பாராட்டியதுடன், அவரை எதிர்காலத்தில் சந்திப்பதற்கான தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

அந்தக் கலைஞர்  களிமண் கொண்டு உருவாக்கும் சிற்பங்கள், சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளையும்  பெற்றுள்ளது. அத்தகைய கலைஞரின் திறமையை ரசித்த ரஜினிகாந்த், அவருக்கு நேரடியாக வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.


அதில் ரஜினி "நீங்க மிகமிக திறமைசாலி, நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் , நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன்! நிச்சயமாக நான் உங்களை ஒருநாள் சந்திக்கிறேன், நல்லா இரு கண்ணா!" என்று  கூறியுள்ளார். மேலும், "தன்னுடைய முக அமைப்பை பொம்மையாக அந்த கலைஞர் செய்ததை பார்த்தேன். இது உண்மையிலேயே ஆச்சரியமான ஒன்று!" என்று அவர் தன்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்தார். அவருடைய வார்த்தைகள் அந்த கலைஞருக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையக்கூடும்.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ரஜினிகாந்தின் ரசிகர்கள், "இது தான் நம்ம தலைவர்!" என்று பெருமையுடன் கூறி  வருகின்றனர்.ரஜினிகாந்தின் இந்த செயல், அவரது பெரிய மனப்பான்மையையும், மற்றவர்களின் திறமையை பாராட்டும் விதத்தையும் காட்டுகிறது. இந்த பாராட்டும், எதிர்கால சந்திப்பு பற்றிய உறுதிப்படுத்தலும், அந்த கலைஞருக்கு ஒரு பெரும் அங்கீகாரத்தைக் கொடுக்கும் என பலரும் எதிர்பாக்கின்றனர்.

Advertisement

Advertisement