• Jun 18 2025

என்னை ட்ரோல் செய்தவர்களுக்கு இதுதான் பதிலடி.! அனுபமா பரமேஸ்வரனின் உருக்கமான பேச்சு!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக திகழ்கிறார் அனுபமா பரமேஸ்வரன். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் தனது அழகு, நடிப்பு என்பன மூலம் தனக்கென ஓர் அழகிய இடத்தை ரசிகர்களிடையே உருவாக்கியிருந்தார்.


 சமீபத்தில், இவர் நடித்த 'டிராகன்' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து, தற்போது அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய மலையாள திரைப்படமான ‘Janaki vs State of Kerala’ ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படம், சமூகப் பிரச்சனைகள், பெண்களின் உரிமைகள் மற்றும் நீதிக்கான போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த திரைப்படம், ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கொச்சியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினரும், ரசிகர்களும் கலந்து கொண்டனர். இதில் மேடைக்கு வருகை தந்த அனுபமா பரமேஸ்வரன், தனது வாழ்க்கை மற்றும் திரையுலக அனுபவங்கள் குறித்து மிகவும் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்திருந்தார். 

அதன்போது, "என்னால் நடிக்க முடியாது என்று நிறைய பேர் ட்ரோல் செய்தார்கள். என்னை நம்பி, இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தவர் பிரவீன் நாராயணன். இந்த படத்துக்குப் பிரதானம் ஜானகி என்ற பெண். அந்த பாத்திரம் எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது." என்றார். இத்தகவல்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement