நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.
அதே நேரத்தில் நடிகர் சத்யராஜ், மகள் திவ்யா சத்யராஜின் திருமண எதிர்ப்பு கருத்துகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகரும் யூட்யூபருமான பயில்வான் ரங்கநாதன், திவ்யா சத்யராஜின் கருத்துகளை கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது கருத்துகள் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானவை என குற்றம்சாட்டியுள்ள அவர், திருமணத்தின் அவசியம் மற்றும் தமிழ் பாரம்பரியத்தின் முக்கியத்துவம் குறித்தும் தனது கருத்துகளை வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், நடிகர் சத்யராஜ் அவரோட மகள் திவ்யா சத்யராஜ் இப்போ ஒரு பேட்டி கொடுத்திருக்காங்க. அதுல கல்யாணத்தை பற்றிய தகவல் அவதூறாக பரவி இருக்கிறது.
எனக்கு தெரிஞ்சு திவ்யா சத்யராஜ் வந்து சத்துணவு பற்றி படிச்சிருக்காங்கன்னு சொன்னாங்க. ஆனா எனக்கு அவங்க பேசுனதை பார்த்தா மனநோயாளி மாதிரி தெரியுது. குழந்தை பெத்துக்கலாமா? பொண்ணு அவங்க அம்மா வீட்டுல வாழலாமா? பையன் அவங்க வீட்டுல வாழலாமா? இது என்ன?
இல்ல, நான் தெரியாமதான் கேக்குறேன். சத்யராஜ் உங்க அப்பன் அப்படின்னு உனக்கு உறுதியா தெரியுமா? உங்க அம்மா சொல்லித்தான் தெரியும். என்ன பேச்சு பேசுது?
அப்பல்லாம் இவரு நாத்திகரா? சத்யராஜ் ஒரு நாத்திகர்னு சொன்னா, சத்யராஜ் வீட்டு கல்யாணத்துக்கு எம்ஜிஆர் போயிருக்கவே மாட்டார். ஏன்னா எம்ஜிஆர் ஒரு ஆன்மீகவாதி.
ஆனா பையன் வந்து நான் டிவிகேக்குதான் ஓட்டு போட்டேன், விஜயோட ஃபேன். விஜய்தான் முதலமைச்சர் ஆவார்னு சொல்லிட்டு இருக்காரு. மகனோட சேராம இப்ப மகளோட சேர்ந்துட்டாரு.
தம்பி சத்யராஜ், நீங்க எம்ஜிஆர் உயிரோடு இருக்கற வரைக்கும் சினிமால நட்சத்திர நாயகனா கொடிகட்டி இருந்தப்போ, எங்கேயாவது ஒரு இடத்துல தேர்தலில் சீட்டு கிடைச்சா போட்டிடுவேன்னு சொன்னீங்களா?
நல்லவேளை புத்திசாலித்தனமா இந்த மாதிரி ஒருவருக்கு திமுகல சீட்டு கொடுக்கணும்னு முதலமைச்சர் முகா ஸ்டாலின் மறுத்துட்டார்.

தமிழ் பண்பாட்டுக்கு விரோதமா சொல்லிருக்காங்க. அது என்ன? எப்படி எடுத்துக்கிறது?
ஒருவனுக்கும் ஒருத்திக்கும் பிறந்த ஒரு தமிழச்சி இப்படி பேச மாட்டார். நிறம் மாறும் பச்சோந்தி என்று நான் சொல்லக்கூடாது; அவருடைய செயல்பாடுகளை பார்த்தா அப்படித்தான் இருக்கு.
ஏன்னா ஒரு தமிழ் பெண்—ஒருவனுக்கு ஒருத்தி என்று திருவள்ளுவர் சொல்லிருக்கார். அந்த கருத்துக்கு நேர்மாறா திவ்யா சத்யராஜ் பேசிருக்காங்க.
இது அவர் ஒரு தமிழ் பெண்ணே இல்லையோன்னு எனக்கு சந்தேகம் வருகிறது.
அவர் என்ன சொன்னார் தெரியுமா? குழந்தை பெத்துக்கலாமாம். ஆனா பொண்ணு அம்மா வீட்டுல வாழலாமாம்; பையன் அவங்க வீட்டுல வாழலாமாம். இது என்ன?
மேலும், கல்யாணமே வேண்டாம்; அது கார்ப்பரேட் ஆயிடுச்சுன்னு சொல்றாங்க. மோதிரம் மாற்றுவது, தாலி கட்டுவது—இவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லைன்னு சொல்றாங்க.
நான் கேட்கிறேன்—சத்யராஜ் உங்க அப்பன்னு உனக்கு உறுதியா தெரியுமா? உங்க அம்மா சொல்லித்தான் தெரியும் இல்லையா?
சத்யராஜ் கல்யாணம் வைதீக முறைப்படி நடந்தது. அவரோட தங்கச்சி கல்யாணத்துக்கும் எம்ஜிஆர் போனார்.
அப்போ அந்த வைதீக முறை எங்க போச்சு?
இதே சத்யராஜ், எம்ஜிஆர் ரசிகனாக இருந்து அவரிடம் நினைவுப் பொருள் கேட்டவர். அப்போ அவர் நாத்திகரா?
சத்யராஜ் நாத்திகர்னு சொன்னா, எம்ஜிஆர் அவர் வீட்டு கல்யாணத்துக்கு போயிருக்க மாட்டார்.
இப்ப திவ்யா சத்யராஜ் கருத்துக்கு சத்யராஜ் உடன்படுறார்னு சொல்லப்படுகிறது.
ஆனா பையன் விஜயின் ரசிகன்; டிவிகேக்கு ஓட்டு போட்டேன், விஜய்தான் முதலமைச்சர் ஆவார் என்று கூறியிருக்கிறார். இப்போது மகனோட இல்லாமல் மகளோட சேர்ந்து இருக்கிறார் என்று விளாசியுள்ளார்..
Listen News!