• Jun 14 2025

இனியாவின் திடீர் முடிவு.. – பாக்கியாவின் பரிதாபம்.! குடும்பத்தில் ஏற்பட்ட பதற்றம்..

subiththira / 20 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஈஸ்வரி இனியாவைப் பாத்து நீ இங்க வாறதை வீட்டில சொன்னியா என்கிறார். அதுக்கு இனியா ஆமா பாட்டி சொல்லிட்டுத் தான் வந்தேன் என்கிறார். இதைக் கேட்ட கோபி இனியா நேற்று நைட் சுதாகர் போன் எடுத்து இனியாவக் காணேல என்று சொன்னார் நான் தான் நீ எங்கட வீட்ட நிக்கிற என்று சொன்னேன் என்கிறார். பின் இனியா நான் அவருக்கு போன் எடுத்தேன் அவர் எடுக்கல என்று சொல்லுறார்.

இதனை அடுத்து பாக்கியா, வீட்டில ஏதாவது பிரச்சனையா அதுதான் சொல்லாமல் கொள்ளாமல் வந்திட்டியா என்று கேட்கிறார். பின் ஈஸ்வரி கோபியையும் பாக்கியாவையும் சுதாகர் வீட்டில போய் இனியாவை விட்டுட்டு வரச் சொல்லுறார். அதனைத் தொடர்ந்து பாக்கியா நீ இங்க வரும்போது இனிமேல் யாருக்காவது சொல்லிட்டு வா என்கிறார். பின் இனியா  வீட்ட இருந்த எல்லாரும் சுதாகர் வீட்ட போய் நிற்கிறார்கள்.


அதனை அடுத்து சுதாகர் நாங்க இனியாவுக்கு ஏதோ நடந்திருச்சு என்று நினைத்துப் பயந்திட்டோம் என்கிறார். மேலும் இனியாவப் பாத்து நீ எங்க வேணுமென்றாலும் போ ஆனால் போற இடத்தையும் வாற இடத்தையும் சொல்லிட்டுப் போ என்கிறார் சுதாகர். இதனைத் தொடர்ந்து கோபி நிதீஷுக்கு இனியா மேல ஏதும் கோபமா அமைதியாக இருக்கிறார் என்று கேட்கிறார். அதுக்கு சுதாகர் அவனுக்கு கொஞ்சம் தலைவலி அதுதான் அமைதியா இருக்கிறான் என்கிறார்.

இதனைத் தொடர்ந்து சுதாகர் மனைவி பாக்கியாவப் பாத்து உங்களுக்கும் இனியா அப்பாவுக்கும் டிவோர்ஸ் ஆகிருச்சு எல்லோ என்று கேட்கிறார். அதுக்கு சுதாகர், ஆமா டிவோர்ஸ் ஆகிருச்சு சம்மந்தி அடுத்த கல்யாணம் பண்ணி அதுவும் சரிவரல என்று சொல்லுறார். பின் சுதாகர் மனைவி இவங்க ரெண்டு பேரும் ஒன்னாத் தான் திரியுறாங்க அதுதான் மறுபடியும் ஒன்னா சேர்ந்திட்டாங்களோ என்று நினைச்சேன் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement