சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ‘ஜெயிலர் 2’ பணிகளை நிறைவு செய்துள்ள நிலையில், அடுத்ததாக ‘தலைவர் 173’ படத்தில் இணையவுள்ளார் என்ற தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஆரம்பத்தில் இந்த படத்தை ‘டான்’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்தில் இந்த வாய்ப்பு ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அஷ்வத் மாரிமுத்து கைக்கு மாறும் என்ற பேச்சு கோலிவுட்டில் பரவி வருகிறது.

இந்த மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாதபோதிலும், படக்குழுவில் நடைபெறும் மாற்றங்கள் குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில், மலையாள நடிகர் பாசில் ஜோசப் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ரஜினிகாந்தின் மகனாக அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்திய பேட்டியில் பாசில் ஜோசப், தாம் ஒரு பிரம்மாண்டமான படத்தில் இணைந்துள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார். இதனால் ‘தலைவர் 173’ குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இயக்குநர் மாற்றம், புதிய நடிகர் சேர்க்கை ஆகியவை இந்த படத்தை இன்னும் பேசுபொருளாக மாற்றியுள்ளன. ரசிகர்கள் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!