19வது ஐபிஎல் தொடர் இந்த ஆண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் மே 2ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டி ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

போட்டியில் சென்னை அணி முழுமையான ஆதிக்கம் செலுத்தி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றி, சென்னை ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக சேப்பாக்கம் மைதானத்தில் கிடைத்த இந்த வெற்றி அணியின் நம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது.
இந்த போட்டியை காண பல பிரபலங்களும் நேரில் வந்திருந்தனர். அதில் முக்கியமாக தனுஷ் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் கலந்து கொண்டார். குடும்பத்துடன் அவர் போட்டியை ரசித்த தருணங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. தனுஷ் தனது மகன்களுடன் கிரிக்கெட் போட்டியை ரசித்த இந்த அரிய தருணம் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Listen News!