சிறகடிக்க ஆசை சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்துள்ளது. அதாவது, சிந்தாமணி பைனான்சியருடன் கை கோர்த்து முத்துவையும் மீனாவையும் வீழ்த்துவதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

மறுபக்கம் அண்ணாமலை வீட்டை ஜப்தி பண்ணாமல் இருக்கிறதுக்கு வேற ஏதும் வழியிருக்கா என்று முத்து கிட்ட கேட்கிறார். அதற்கு முத்து அந்த பைனான்சியரிட்ட பேசி இனிமேல் பிரயோசனம் இல்ல என்கிறார்.
அதைத் தொடர்ந்து அண்ணாமலை எதுவும் பண்ண முடியாமல் நாம அப்ப வேடிக்கை பார்க்கணுமா என்று அழுது கொண்டே சொல்லுறார். பின் அவமானத்திலிருந்து தப்பிக்க வீட்டை விட்டு செல்ல முடிவெடுக்கின்றார் அண்ணாமலை. இனி இவர்கள் எங்கு தங்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
Listen News!