• Oct 26 2024

தனுஷ் என்னிடம் 350 பீர் பாட்டில் வாங்கினார்.. அதிர்ச்சி தகவல் அளித்த வியாபாரி

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நடிக்கும் படத்திற்காக என்னிடம் 350 பீர் பாட்டில்கள் வாங்கப்பட்டுள்ளதாக வியாபாரி ஒருவர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடித்த இயக்கி உள்ள ’ராயன்’ திரைப்படம் வரும் 26 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் ட்ரெய்லருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பழைய பாட்டில் வியாபாரி ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தங்களிடம் இருந்து சினிமாவுக்கு பாட்டில்கள் வாங்கி செல்வார்கள் என்றும் குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகளுக்கு இந்த பாட்டில்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். சமீபத்தில் தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படத்திற்காக 350 காலி பீர் பாட்டில்கள் மற்றும் வெள்ளை பாட்டில்களும் வாங்கப்பட்டன என்றும் இந்த பாட்டில்கள் அந்த படத்தின் சண்டை காட்சிக்காக பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

’ராயன்’ திரைப்படம் ஏற்கனவே வடசென்னை பகுதியில் உள்ள கதை என்று கூறப்படும் நிலையில் பீர் பாட்டில் ஸ்டண்ட் காட்சி அதில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது இந்த வியாபாரியின் பேட்டியில் இருந்து தெரிய வருகிறது. இதுவரை தன்னிடம் ஸ்டண்ட் காட்சி ஒன்றுக்காக அதிக பாட்டில்கள் வாங்கியது ’ராயன்’ படக்குழுவினர்கள் தான் என்றும் அவர் கூறியதை பார்க்கும்போது இந்த படத்தில் பாட்டில்கள் பறக்கும் ஸ்டண்ட் காட்சியை வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தனுஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement