பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா கோபியைப் பாத்து சுதாகர் நம்மல எல்லாம் முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரோ என்று கேட்கிறார். மேலும் தப்பு பண்ணவங்க தான் பொறுத்துக் கொண்டு போகணும் நாம என்ன தப்பு பண்ணாங்க என்கிறார். அதுக்கு கோபி நடந்தது நடந்து முடிஞ்சிருச்சு நீ கொஞ்சம் ரிலாக்ஸா இரு என்கிறார். அதனை அடுத்து பாக்கியா நாம ஒன்னும் அவங்கள போய் பொண்ணு கேக்கல அவங்களாத் தான் இங்க வந்து பொண்ணு கேட்டாங்க என்று சொல்லுறார். பின் கோபி அதையெல்லாம் சரி பண்ணிடலாம் என்கிறார்.
இதனை அடுத்து, ஈஸ்வரி பாக்கியாவைப் பாத்து என்னத்துக்கு இப்ப கோபியை மிரட்டிக் கொண்டிருக்கிற என்று கேட்கிறார். அதுக்கு கோபி நாங்க ஹோட்டலைப் பற்றி கதைச்சுக் கொண்டிருந்தோம் என்று சொல்லி சமாளிக்கிறார். மேலும் தான் பண்ணின தப்ப நானே சரி பண்ணுறேன் என்று பாக்கியாட சொல்லுறார்.
அதனைத் தொடர்ந்து சுதாகர் தன்ர மனைவியிடம் பாக்கியா கோபப்பட்டு ரொம்பவே இழந்திட்டாங்க ஆனாலும் புத்தி வரல என்று சொல்லுறார். பின் சுதாகர் இனியாவைக் கூப்பிட்டு இங்க நடக்கிற பிரச்சனைகளை எதுக்காக வீட்ட போய் சொல்லுற என்று கேட்கிறார். மேலும் வீட்டில இருக்க bore அடிக்குதென்றால் உன்ர மீடியா வேலைக்கு போ என்கிறார்.
அதைக் கேட்டு இனியா ரொம்பவே சந்தோசப்படுறார். பின் இனியா பாக்கியாவுக்கு போன் எடுத்து வேலைக்கு போக சுதாகர் சம்மதிச்சிட்டார் என்று சொல்லுறார். இதனைத் தொடர்ந்து இனியா வீட்டில இருந்த எல்லாருகிட்டயும் சொல்லிட்டு வேலைக்கு கிளம்புறார். அப்ப சுதாகர் வேலை செய்யுற இடத்தில ஏதாவது பிரச்சனை என்றால் எங்க கிட்ட சொல் அதை விட்டுட்டு வீட்டுக்குப் போய் சொல்லிக்கொண்டிருக்காத என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!