• Oct 26 2024

அஜித் - பிரசாந்த் நீல் சந்திப்பு உண்மைதான்.. ஆனால் அது மட்டும் பொய்: சுரேஷ் சந்திரா

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

’கேஜிஎப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் நடிகர் அஜித் ஆகிய இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணிபுரிய இருப்பதாகவும் இந்த திரைப்படம் ’கேஜிஎப் 3’ படத்துடன் கனெக்சன் உள்ள படம் என்றும் நடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. ஆனால் இப்படி ஒரு சந்திப்பு நடைபெறவே இல்லை என்றும் இது முழுக்க முழுக்க பொய் என்றும் பத்திரிகையாளர்கள் போர்வையில் இருக்கும் சில போலி யூடியூபர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் அளித்த பேட்டியில் ’அஜித் மற்றும் பிரசாந்த் நீல் சந்திப்பு நடந்தது உண்மைதான் என்று கூறியுள்ளார். மேலும் பிரசாந்த்  நீல் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்க இருப்பதும் உண்மைதான் என்றும் ஆனால் இந்த படம் எப்போது உருவாகும் என்று தெரியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் யாஷின் ‘கேஜிஎப் 3’ படத்தில் அஜித் படம் கனெக்சன் என கூறப்படுவது முழுக்க முழுக்க பொய் என்றும் அஜித் - பிரசாந்த் நீல்  படத்திற்கும் ’கேஜிஎப் 3’ திரைப்படத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே அஜித் - பிரசாந்த் நீல்  சந்திப்பு நடந்தது உண்மை என்றும் இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணைவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அஜித் தற்போது’ விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த இரண்டு படங்களை முடித்த பின்னர் அவர் பிரசாந்த் நீல் படத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement