• Apr 23 2026

எல்லாரும் வேணாம்னு சொன்னாங்க! பிடிவாதமா இருந்தேன்.. 'பிச்சைக்காரன்' குறித்து விஜய் ஆண்டனி

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் ஆண்டனி சமீபத்தில் பகிர்ந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, தனது வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்த பிச்சைக்காரன் திரைப்படத்தின் தலைப்பு குறித்து அவர் பகிர்ந்த அனுபவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


“பிச்சைக்காரன்” என்ற தலைப்பை முதன்முதலில் தேர்வு செய்த போது, திரைத்துறையில் இருந்த பலரும் அதை கடுமையாக எதிர்த்ததாக விஜய் ஆண்டனி கூறினார். அந்த தலைப்பு நல்லதல்ல, மக்கள் ஏற்க மாட்டார்கள், மாற்றிக் கொள்ளுங்கள் என்று பலரும் அவருக்கு அறிவுரை கூறியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார். சினிமா உலகில் அனுபவம் வாய்ந்தவர்கள் முதல், அவரை சந்தித்தவர்களெல்லாம் இந்த தலைப்பை மாற்றுமாறு வலியுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கூட, அந்த தலைப்பின் மீது தனக்கு இருந்த நம்பிக்கை குறையவில்லை என்று விஜய் ஆண்டனி தெளிவுபடுத்தினார். “எல்லோருடைய கருத்தையும் கேட்பேன். ஆனால், எனக்குச் சரி என்று தோன்றியதை செய்வதில் நான் உறுதியானவன்” என்று அவர் தெரிவித்தார். இந்த ஒரு வரி, அவரது தனிப்பட்ட முடிவெடுக்கும் தைரியத்தை வெளிப்படுத்துகிறது.

அவரது இந்த பிடிவாதமும் நம்பிக்கையும் தான் இன்று “பிச்சைக்காரன்” படத்தை ஒரு பிராண்டாக மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2016ஆம் ஆண்டு வெளியான இந்த படம், கதைக்களம், உணர்ச்சி, மற்றும் சமூக செய்தி ஆகியவற்றால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, அம்மா-மகன் உறவை மையமாகக் கொண்டு உருவான இந்த படம், பலரின் மனதையும் உருக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement