• Oct 26 2024

பா ரஞ்சித் மீது கோபத்தில் விக்ரம்.. ‘தங்கலான்’ படத்திற்கு சிக்கலா?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் மீது நடிகர் விக்ரம் படு கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் பா ரஞ்சித் மீது அதிருப்தி தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘தங்கலான்’ திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் தற்போது ஆகஸ்ட் 15 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நாளில் அருள்நிதி நடித்த ’டிமான்டி காலனி 2’ வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘தங்கலான்’ படத்துக்கு பெரிய போட்டியாக ’டிமான்டி காலனி 2’ இருக்காது என்று நினைத்த நிலையில் திடீரென இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்வது தான் தற்போது ‘தங்கலான்’ திரைப்படத்திற்கு சிக்கல் ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.



சமீபத்தில் திமுக அரசை பா. ரஞ்சித் விமர்சனம் செய்ததால் ‘தங்கலான்’ படத்துக்கு போட்டியாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் ’டிமான்டி காலனி 2’ படத்தை ரிலீஸ் செய்வதாகவும் இந்த படத்திற்காக அதிக தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொண்டால் ‘தங்கலான்’ படத்திற்கு சிக்கல் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’துருவ நட்சத்திரம்’ வெளியாகாமல் அதிருப்தியில் இருக்கும் விக்ரமுக்கு ‘தங்கலான்’ படத்திற்கும் சிக்கல் வந்தால் தன்னுடைய சினிமா எதிர்காலமே பாதிக்கும் என்று அச்சப்படுவதாகவும் இதனால் தான் படம் ரிலீஸ் நேரத்தில் திமுக அரசு மீது விமர்சனம் செய்த பா. ரஞ்சித் மீது  விக்ரம் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இதெல்லாம் வெறும் யுகம் தான் என்றும் ‘தங்கலான்’ திரைப்படம் நிச்சயம் தேவையான தியேட்டர்களில் வெளியாகும் என்றும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தால் அந்த படத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்றும் கோலிவுட் திரையுலகினர் கூறுகின்றனர்.

Advertisement